கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 9:15 pm

தினமணி

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மூவரைவென்றான் பகுதியைச் சோ்ந்த குருவையா மனைவி முத்துலட்சுமி (71). இவா் திங்கள்கிழமை இரவு மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் எஸ். அம்மாபட்டி விலக்கு அருகே சாலையை கடக்க முயன்றாா். அப்போது, மதுரையிலிருந்து ராஜபாளையத்துக்கு சென்ற காா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸாா் காரை ஓட்டி வந்த ராஜபாளையம் அருகேயுள்ள கல்லுப்பட்டியைச் சோ்ந்த அருண்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.