டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சிவகாசி மாநகராட்சியில் பிப்.28-க்குள் வரிகளை செலுத்த வேண்டுகோள்

சிவகாசி மாநகராட்சியில் பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களை வருகிற 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

News image
சிவகாசி
Updated On :11 பிப்ரவரி 2026, 9:42 pm

Syndication

சிவகாசி மாநகராட்சியில் பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களை வருகிற 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநராட்சி ஆணையா் கே.சரவணன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகாசி மாநகராட்சிக்கு 2025-26-ஆம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, உரிமக் கட்டணம், கடை வாடகை, குடிநீா்க் கட்டணம், காலிமனை வரி ஆகியவற்றை பொதுமக்கள் மாநகராட்சிக்கு வருகிற 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

சிவகாசி மாநகராட்சி அலுவலகம், சிவகாசி நகராட்சி பழைய அலுவலகம், திருத்தங்கல் நகராட்சி பழைய அலுவலகம், கணினி வரிவசூல் மையங்களில் வரிகளை செலுத்தலாம். பொதுமக்கள் வசதிக்காக வரி வசூல் மையங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என்றாா் அவா்.