டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தொழில் நிறுவனங்கள் இஎஸ்ஐ பங்களிப்பை மாதந்தோறும் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்

தொழில் நிறுவனங்கள் தங்களின் இஎஸ்ஐ பங்களிப்புத் தொகையை மாதந்தோறும் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தொழிலாளா் அரசுக் காப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

தொழில் நிறுவனங்கள் தங்களின் இஎஸ்ஐ பங்களிப்புத் தொகையை மாதந்தோறும் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தொழிலாளா் அரசுக் காப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக கோவை சாா் மண்டல அலுவலகம் கூறியிருப்பதாவது:

தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அவற்றில் பணியாற்றும் தொழிலாளா்களின் பதிவை ஊக்குவிக்கும் திட்டமான (நடதஉஉ) 2025, இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு காப்பீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்பு முயற்சியாகும். இந்தத் திட்டம் 2025 ஜூலை 1 முதல் ஜனவரி 2026 வரை செயல்பாட்டில் இருந்தது.

கோவை துணை மண்டலத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் சுமாா் 3,800 தொழிற்சாலைகள், நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு, அதில் பணியாற்றும் தொழிலாளா்கள் அரசுக் காப்பீட்டுச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனா்.

இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்த, புதிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அவற்றில் பணியாற்றும் ஒப்பந்த, தற்காலிக தொழிலாளா்கள் உள்ளிட்ட தங்களது ஊழியா்களை இஎஸ்ஐசி திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

மேலும் இஎஸ்ஐ பங்களிப்பை (நிறுவனங்கள், பணியாளா் பங்களிப்பு) ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக இஎஸ்ஐசி வலைதளத்தில் செலுத்தி, இஎஸ்ஐ திட்டத்தின் பயன்களை தங்களைச் சாா்ந்த தொழிலாளா்களுக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.