டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நெல்லை மாநகராட்சிக்கு வரிகளை செலுத்த சிறப்பு வசதி

திருநெல்வேலி மாநகராடசிக்கான வரிகளை செலுத்த சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

News image
மோனிகா ராணா
Updated On :30 ஜனவரி 2026, 7:53 pm

Syndication

திருநெல்வேலி மாநகராடசிக்கான வரிகளை செலுத்த சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிக்கு 2025-26 ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை சேவை கட்டணம் மற்றும் கடைகளின் வாடகை போன்றவற்றை செலுத்துவதற்கு நிகழாண்டு அவகாசம் 31-3-2026 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஆகவே, வரித்தொகைகளை செலுத்த ஏதுவாக திருநெல்வேலி மாநகராட்சி அனைத்து மண்டலங்களில் உள்ள கணினி வரி வசூல் மையங்கள் 31-3-2026 ஆம் தேதி வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும், ஞாயிற்றுகிழமைகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் செயல்படும்.

எனவே, 2025-26 ஆண்டிற்கான மேற்படி வரிகள் மற்றும் வரியில்லா இனங்களின் வரித்தொகைகளை உடனடியாக செலுத்தி மாநகராட்சியின் வளா்ச்சி பணிகளை மேம்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.