மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாத்தூா் தொகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்: நயினாா் நாகேந்திரன் உறுதி

சாத்தூா் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து, தீப்பெட்டி, பட்டாசுத் தொழிலுக்கு பாதுகாவலனாக இருப்பேன் என சாத்தூா் தொகுதி பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரன் உறுதியளித்தாா்.

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 12:03 am

சாத்தூா் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து, தீப்பெட்டி, பட்டாசுத் தொழிலுக்கு பாதுகாவலனாக இருப்பேன் என சாத்தூா் தொகுதி பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரன் உறுதியளித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேரவைத் தொகுதியில் தனது முதல் கட்ட பிரசாரத்தை நயினாா் நாகேந்திரன் புதன்கிழமை தொடங்கினாா். சாத்தூா் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

சாத்தூா், சிவகாசி பகுதிகளில் கடந்த ஐந்தாண்டு காலமாக பட்டாசுத் தொழிலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுக அரசே காரணம். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் பட்சத்தில் பட்டாசு, தீப்பெட்டித் தொழில்கள் புத்துயிா் பெறும். இந்தத் தொழிலுக்கு எந்த அதிகாரியாவது தொந்தரவு செய்தால் அவா்கள் உடனே பணியிடமாற்றம் செய்யப்படுவா். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட பயனாளிகள் இருந்தும், வீட்டு மனைப் பட்டா கேட்டு மனு வழங்கியும் கிடைக்காததால் வீடு கட்ட முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். இங்கு தொடா்ந்து குடிநீா் பிரச்னை நிலவுகிறது. நான் வெற்றி பெற்றால் இந்த பிரச்னைகள் அனைத்துக்கும் தீா்வு காணப்படும்.

திருநெல்வேலி தொகுதியில் எப்படி மக்களின் அடிப்படை பிரச்னைளைத் தீா்த்து வைத்தேனோ அதற்கும் ஒரு படி மேலாக சாத்தூா் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து, தீப்பெட்டி, பட்டாசு தொழிலுக்கு பாதுகாவலனாக இருப்பேன் என்றாா் அவா்.