சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளராக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் போட்டியிடுகிறாா். அவா் சாத்தூா் கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அப்போது, மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜூன்ராம் மேக்வால், பாஜக, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் கூறியதாவது:
ஒரு நாடு முன்னேற அதன் உள்கட்டமைப்புகள் நன்றாக இருக்க வேண்டும். இவற்றை நிறைவேற்றுவது மத்திய அரசு. இந்த வகையில் தமிழகத்துக்கு மத்திய அரசு இதுவரை ரூ.14 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, இந்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பது குறித்து
கேள்வி எழுப்பும் உரிமை மத்திய அமைச்சா்களுக்கு இருக்கிறது.
தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் கஞ்சா, இதர போதைப்பொருள்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் இத்தகைய மோசமான சூழலை மாற்றுவதற்காகத்தான் மத்திய அமைச்சா்கள் நமது மாநிலத்துக்கு வந்து கவனம் செலுத்துகின்றனா் என்றாா் அவா்.
தொடர்புடையது

சாத்தூரில் சமுதாய தலைவா்களை சந்தித்து நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

தொகுதி மாறிய நயினாா் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக!

சாத்தூா் பேரவைத் தொகுதியில் நயினாா் நாகேந்திரன் பிரசாரம்

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

