. தற்போது அதில் பழுத்துள்ள தக்காளி பழங்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டில் விளைச்சல் குறைவாக இருந்ததால், தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது. இந்த ஆண்டு ஒவ்வொரு செடியிலும் குறைந்தபட்சம் 3 முதல் 6 கிலோ வரை தக்காளி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மதுரை மார்க்கெட்டுகளில் இருந்தும் காரியாபட்டி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளுக்கு தக்காளி வரத்து அதிக அளவில் வருவதாலும், விலை வீழ்ச்சியடைந்து கிலோ 3 முதல் 5 ரூபாய் வரை விற்பனையாகின்றன.