கழிவுநீர் தேங்கியதால் மோதல்: 5 பேர் மீது வழக்கு
காரியாபட்டி அருகே தர்மாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் வீட்டருகே வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டது. இதை அதே பகுதி வேல்முருகன் சரிசெய்தார். அப்போது சக்திவேல் கண்டித்துள்ளார். இதல் தகராறு ஏற்பட்டு, வேல்முருகன், அழகர், காளிமுத்து, கார்த்திசெல்வம், முருகன் ஆகியோர் சக்திவேலை அரிவாளால் வெட்டினராம்.










