திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உதவித்தொகை வழங்கக் கோரி வட்டாட்சியரை முற்றுகையிட்ட முதியோர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் குரண்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு கடந்த சில மாதங்களாக முதியோர் உதவித்தொகை

Updated On :29 நவம்பர் 2014, 6:56 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் குரண்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு கடந்த சில மாதங்களாக முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டது. இதனால் வயதானவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் குரண்டி கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முதியவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பொன்ராமரை முற்றுகையிட்டனர். உதவிதொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.