நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

போக்குவரத்துக்கழக பணிமனை அமைப்பதில் இழுபறி

காரியாபட்டியில் போக்குவரத்துக்கழக பணிமனைக்கு இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:32 am

கல்யாணி வெங்கடராமன்

காரியாபட்டியில் போக்குவரத்துக்கழக பணிமனைக்கு இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

காரியாபட்டியைச் சுற்றி 120-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை தொடங்க கடந்த 2009-இல் அரசு உத்தரவிட்டு, தனியார் இடத்தில் அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் அடிப்படை வசதிகள் கிடையாது. சாலை குண்டும், குழியுமாக மழைக்காலங்களில் சேறும் சகதியாக மாறிவிடுகிறது. வெயில் காலங்களில் புழுதி பறக்கிறது. டீசல் பங்க் கிடையாது. பணியாளர்களுக்கு ஒய்வறை கிடையாது.

இந்நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சட்டப்பேரவையில் பணிமனைக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்தார். இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை. பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள பிச்சம்பட்டியில் இடம் தேர்வு செய்தனர். ஆனால் அங்கு இடவசதி இல்லை என கை விட்டனர். இதுபோல 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் முழு ஆர்வத்துடன் செயல்பட்டு பணிமனைக்கு இடம் தேர்வு செய்ய வேண்டும் என காரியாபட்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.