திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நரிக்குடி வட்டார வள மையத்தில் பயிற்சிகளின் தாக்கம் என்ற பயிற்சி ஆசிரியர்களுக்கு நடைபெற்றது. இந்த கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ் படித்தல் எழுதுதல்,

Updated On :3 டிசம்பர் 2014, 7:05 pm

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நரிக்குடி வட்டார வள மையத்தில் பயிற்சிகளின் தாக்கம் என்ற பயிற்சி ஆசிரியர்களுக்கு நடைபெற்றது. இந்த கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ் படித்தல் எழுதுதல், செயல்வழிக் கற்றல், வலுவூட்டம் மற்றும் கணித உபகரணப் பெட்டியை பயன்படுத்தி எளிமையாக கணிதம் கற்பித்தல் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கல்வி வலுவூட்டல் மற்றும் கணித மேம்பாட்டு திறன் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சிகளின் மூலம் ஆசிரியர்களின் மனதில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி விவாதிக்கப்பட்டது.

ஏற்பாடுகளை மைய மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.