விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள்-9430 பேர்களும், மாணவிகள் 11682 பேர்களும் என மொத்தம் 21112 பேர்கள் வரையில் பிளஸ்2 தேர்வை எழுதியுள்ளனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வினாத்தாள் பாதுகாப்பு மையங்களான அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள சாத்தூர் எத்திலால் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலகத்திலும் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல், விருதுநகர் கல்வி மாவட்டத்தில், விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகாசி ஏ.யூ.நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வழங்கப்பட இருக்கிறது.