இதில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கல்லூரிகளில் உயர் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு வேறுபாடின்றி 40 பேருக்கு கல்வி உதவி தொகையாக ரூ.1 லட்சம் வரையில் வழங்கப்பட்டது. மேலும், இந்த அறக்கட்டளை சார்பில் நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியின் வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் அமரும் வகையில் 20 பிளாஸ்டிக் சேர்களும் அளிக்கப்பட்டது. மேலும், கணவனை இழந்து வறுமையில் வாடும் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரூ.20 ஆயிரம் குடும்ப நல நிதியாகவும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் வணிக நகர் அரிமா சங்கத்தின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையைச் சேர்ந்த சின்னகாந்தி, ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.