நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வரதட்சிணை கொடுமை: இருவர் கைது

காரியாபட்டி அருகே கூடுதல் வரதட்சிணை கேட்டு, பெண்ணை வீட்டை விட்டு விரட்டியதாக கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:06 am

கல்யாணி வெங்கடராமன்

காரியாபட்டி அருகே கூடுதல் வரதட்சிணை கேட்டு, பெண்ணை வீட்டை விட்டு விரட்டியதாக கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.

   காரியாபட்டி அருகே தோணுகாலைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி ராஜாமணி (வயது32). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்களாகி விட்டது. திருமணத்தின் போது 10 பவுன் நகை மற்றும் ரொக்கம் கொடுத்துள்ளனர்.     இந்நிலையில் மோகன்ராஜ் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால், அவரது மனைவி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இவரது கணவரும், மாமியாரும்  நகை மற்றும் பணம் வாங்கி வருமாறு கூறி ராஜாமணியைத் துன்புறுத்தியதுடன், வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது. 

   இதுகுறித்து ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மோகன்ராஜ் மற்றும் அவரது தாயார் ஜெயபாக்கியம் ஆகியோரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.