திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நிலவேம்பு கஷாயம் வழங்கல்

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதைத் தடுக்கும் நோக்கத்துடன் அருப்புக்கோட்டை நகராட்சியில் நகர்ப்புற சமுதாய முன்னேற்றக் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2013, 8:40 pm

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதைத் தடுக்கும் நோக்கத்துடன் அருப்புக்கோட்டை நகராட்சியில் நகர்ப்புற சமுதாய முன்னேற்றக் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

   வெள்ளைக்கோட்டை செங்குந்தர் நடுநிலைப் பள்ளி, சொக்கலிங்கபுரம் தேவாங்கர் நடுநிலைப் பள்ளி, செங்கமுத்து பூங்கா, தெற்குதெரு சுகாதாரப் பிரிவு அலுவலகம், எம்.எஸ்.ஆர். பள்ளி, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் இக்கசாயம் வழங்கப்பட்டது.

   நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம் நிலவேம்பு கஷாயத்தை பொதுமக்களுக்கு வழங்கி,  தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தமிழ்காந்தன், முன்னாள் துணைத் தலைவர் பழனிச்சாமி, கவுன்சிலர் மணி, சித்த மருத்துவர் திலகம், நகர்நல அலுவலர் ராஜபாண்டி, சமுதாய அமைப்பாளர் நாகேஷ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், சரத்பாபு, இளங்கோ, தவிட்டுராஜன், செல்லபாண்டியன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.