நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நிலவேம்பு கஷாயம் வழங்கல்

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதைத் தடுக்கும் நோக்கத்துடன் அருப்புக்கோட்டை நகராட்சியில் நகர்ப்புற சமுதாய முன்னேற்றக் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:57 am

கல்யாணி வெங்கடராமன்

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதைத் தடுக்கும் நோக்கத்துடன் அருப்புக்கோட்டை நகராட்சியில் நகர்ப்புற சமுதாய முன்னேற்றக் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

   வெள்ளைக்கோட்டை செங்குந்தர் நடுநிலைப் பள்ளி, சொக்கலிங்கபுரம் தேவாங்கர் நடுநிலைப் பள்ளி, செங்கமுத்து பூங்கா, தெற்குதெரு சுகாதாரப் பிரிவு அலுவலகம், எம்.எஸ்.ஆர். பள்ளி, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் இக்கசாயம் வழங்கப்பட்டது.

   நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம் நிலவேம்பு கஷாயத்தை பொதுமக்களுக்கு வழங்கி,  தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தமிழ்காந்தன், முன்னாள் துணைத் தலைவர் பழனிச்சாமி, கவுன்சிலர் மணி, சித்த மருத்துவர் திலகம், நகர்நல அலுவலர் ராஜபாண்டி, சமுதாய அமைப்பாளர் நாகேஷ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், சரத்பாபு, இளங்கோ, தவிட்டுராஜன், செல்லபாண்டியன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.