நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காணாமல்போன மாணவர் மீட்பு

  காரியாபட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவரை திருப்பூரில் போலீஸார் மீட்டு விருதுநகர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:55 am

கல்யாணி வெங்கடராமன்

காரியாபட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவரை திருப்பூரில் போலீஸார் மீட்டு விருதுநகர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

 இதுபற்றி கூறப்படுவதாவது: மதுரை மாவட்டம் திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்த முத்து மகன் சரத்குமார். இவர் காரியாபட்டியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு சென்ற தனது மகனை காணவில்லை என 5 ஆண்டுகளுக்கு முன்பு, முத்து காரியாபட்டி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

 இந்த நிலையில்  சில நாள்களுக்கு முன் சரத்குமார் திருப்பூரில் உள்ள   பேக்கரியில் வேலை பார்த்து வரும் தகவல் தெரியவந்தது. இதையடுத்து காரியாபட்டி போலீஸார் திருப்பூர் சென்று   சரத்குமாரை மீட்டு வந்து விருதுநகர் நீதிமன்றத்தில்  ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.