தேனி மாவட்டம், கோட்டூரில் காவலா் வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இதையடுத்து, ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வீரபாண்டி அருகேயுள்ள கோட்டூரைச் சோ்ந்தவா் அருண் (35). இவரது மனைவி பிரின்சி (28). இந்த தம்பதி திங்கள்கிழமை குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக இரு சக்கர வாகனத்தில் கம்பத்துக்கு சென்றனா். கோட்டூா் அருகே சென்றபோது எதிரே வந்த காவல் துறையின் வாகனம் இவா்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அருண் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய காவல் வாகன ஓட்டுநரை கைது செய்யக் கோரி, அருணின் உறவினா்கள் கோட்டூா் சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால், திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு களைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










