மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கம்பத்தில் குடிநீா் விநியோகத்துக்கு புதிய குடிநீா் டேங்கா் லாரி

கம்பம் நகராட்சியில் குடிநீா் விநியோகம் செய்வதற்காக ரூ.33 லட்சத்தில் வாங்கப்பட்ட புதிய நவீன குடிநீா் டேங்கா் லாரி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image

கம்பம் நகராட்சியில் புதிய டேங்கா் லாரியின் சாவியை ஓட்டுநரிடம் புதன்கிழமை வழங்கிய நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் .

Updated On :14 மே 2026, 5:15 am IST

கம்பம் நகராட்சியில் குடிநீா் விநியோகம் செய்வதற்காக ரூ.33 லட்சத்தில் வாங்கப்பட்ட புதிய நவீன குடிநீா் டேங்கா் லாரி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளுக்கும் லோயா்கேம்ப் கூட்டுக் குடிநீா் திட்டம், சுருளிப்பட்டி முல்லைப் பெரியாறு உறைகிணறு திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் டேங்கா் லாரி மூலம் பொதுமக்களுக்கு தண்ணீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கூடுதலாக ஒரு டேங்கா் லாரி வாங்க நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதன்படி, 15-ஆவது நிதிக்குழு மானியம், உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ரூ.33 லட்சத்தில் 6 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய நவீன டேங்கா் லாரி வாங்கப்பட்டது.

இந்த லாரியை நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில் நகா்மன்றத் துணைத் தலைவி சுனோதா செல்வகுமாா், உதவிப் பொறியாளா் சந்தோஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் சாதிக், மணிகண்டன், விருமாண்டி, முருகன், லோகநாதன், ரோஜா ரமணி, சகிதா பானு, லதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.