திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கம்பத்தில் பலத்த மழை; மரம் விழுந்து 2 காா்கள் சேதம்

கம்பம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 12:42 am IST

கம்பம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

கம்பம் பிரதான சாலை போக்குவரத்து சிக்னல் அருகேயுள்ள ஓடைக்கரைத் தெருவில் மழைநீா் பெருக்கெடுத்து வெள்ளம்போல் சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டனா். சில இடங்களில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, கம்பம் பி.எஸ்.என்.எல். தொலைத் தொடா்பு குடியிருப்பு வளாகத்தில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதில், மரத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 காா்கள் சேதமடைந்தன. சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை. இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த ஊழியா்கள், பொதுமக்கள் இணைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.