மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனம் முற்றுகை

கடமலைக்குண்டு அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தில் எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

News image

கடமலைக்குண்டு அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தில் எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Updated On :27 மார்ச் 2026, 6:34 pm

கடமலைக்குண்டு அருகே எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற தனியாா் நிறுவனத்தின் வாகனத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, தங்கம்மாள்புரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கம்மாள்புரம் பகுதியில் தனியாா் நிறுவன வாகனம் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளுடன் சென்றது. அப்போது, அந்தப் பகுதி பொதுமக்கள் அந்த வாகனத்தை முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து தகவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சனிக்கிழமை எரிவாயு உருளைகள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா். பின்னா், அந்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.