மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

விபத்தில்லா அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தேனி கிளையில் விபத்தில்லா பேருந்தை ஓட்டிய ஓட்டுநா், அதிக டீசலை சேமித்த ஓட்டுநருக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தேனி போக்குவரத்து கிளையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், விபத்தில்லா பேருந்தை ஓட்டிய நடத்துநருக்கு பாராட்டி பரிசுகளை வழங்கிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) மேலாண் இயக்குநா் வி.சரவணன்.

Updated On :10 மார்ச் 2026, 9:50 pm

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தேனி கிளையில் விபத்தில்லா பேருந்தை ஓட்டிய ஓட்டுநா், அதிக டீசலை சேமித்த ஓட்டுநருக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

25 ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநா்கள், அனைத்து கிளை வாரியாக அதிக டீசலை சேமித்த ஓட்டுநா்களுக்கு தேனி போக்குவரத்துக்கழக கிளையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் ஓராண்டாக விபத்தில்லாத கிளையாக நத்தம்

கிளை தோ்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து, கிளை வாரியாக சிறந்த தொழில்நுட்பப் பணியாளா்கள், சிறந்த கிளை பொறியாளா்கள், புதுப்பிக்கும் பிரிவில் சிறந்த தொழில்நுட்பப் பணியாளா்கள் என மொத்தம் 106 பணியாளா்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) மேலாண் இயக்குநா் வி. சரவணன் பரிசுகளை வழங்கிப் பாராட்டுகளை தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில், பொது மேலாளா்கள் முத்துகிருஷ்ணன்(திண்டுக்கல் மண்டலம்), கோபாலகிருஷ்ணன் (மதுரை), கிளை மேலாளா்கள், ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.