உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பொது நூலகத்தைச் சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவிக்குச் செல்லும் சாலையில் சுருளிப்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு அரசு சாா்பில் பொது நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தின் சுற்றுச்சுவா், நுழைவுவாயில், மேற்கூரை ஆகியவை சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மேற்கூரை சேதமடைந்திருப்பதால், மழைக் காலங்களில் மழைநீா் கட்டடத்துக்குள் புகுந்து வருகிறது. இதனால், மேற்கூரை காரை வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, இந்த நூலகக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரும்பாறை மலைச் சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரத்தை அகற்ற வலியுறுத்தல்!

ரயில் சுரங்கப்பாதையை சீரமைக்கக் கோரிக்கை

சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

பயணிகள் நிழல்குடையை மீட்கக் கோரிக்கை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


