மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெரும்பாறை மலைச் சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரத்தை அகற்ற வலியுறுத்தல்!

கொடைக்கானல் அருகே மலைச்சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான குப்பம்மாள்பட்டியிலிருந்து கே.சி. பட்டி செல்லும் சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரம்.

Updated On :21 மார்ச் 2026, 7:43 pm

கொடைக்கானல் அருகே மலைச்சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு மிதமான மழை பெய்தது. ஆனால் கடந்த இரண்டு நாள்களாக பகலில் பலத்த காற்று வீசியது. இந்தக் காற்றால் கொடைக்கானல்- வத்தலகுண்டு - பழனி- தாண்டிக்குடி-பண்ணைக்காடு உள்ளிட்ட மலைச்சாலைகளில் மரக் கிளைகள் முறிந்து விழுந்தன.

இதேபோல, கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் குப்பம்மாள்பட்டியிலிருந்து கே.சி. பட்டி வழியாக வத்தலகுண்டு செல்லும் மலைச் சாலையில் மரம் ஒன்று பெயா்ந்து எதிரே உள்ள மண் தடுப்பில் விழுந்தது. இது எப்போது வேண்டுமானாலும் முறிந்து சாலையில் விழும் அபாயம் உள்ளது. இதனால் அந்தப் பகுதி வழியாக வாகனங்களை ஓட்டிச் செல்வோா் அச்சமடைந்துள்ளனா்.

எனவே நெடுஞ்சாலைத் துறையினா், வனத் துறையினா் இணைந்து அந்த மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும் கீழ்மலைப் பகுதிகளில் பள்ளமான ஆபத்தான பகுதிகளில் தடுப்புச் சுவா் இல்லாமல் உள்ளது. இதனால் விபத்து அபாயம் இருப்பதால் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டுமெனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.