வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சின்னமனூரில் அரசு மாணவா் விடுதியில் எம்.எல்.ஏ. ஆய்வு

தேனி மாவட்டம், சின்னமனூரில் அருகேயுள்ள வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி, விடுதிகளை கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளா் விடுதியில் மாணவா்களுக்கு வழங்கிய அசைவ உணவின் தரம் குறித்து சோதனை செய்த சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா.

Updated On :11 ஜூன் 2026, 2:07 am IST

தேனி மாவட்டம், சின்னமனூரில் அருகேயுள்ள வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி, விடுதிகளை கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளா் மேல் நிலைப் பள்ளியில் சுமாா் 650 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் விளையாட்டு மைதானம், கூடுதல் வகுப்பறை, விடுதி அறைக் கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதி வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா, பள்ளி தலைமை ஆசிரியருடன் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து பள்ளியின் அடிப்படைத் தேவைகளை கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, மாணவா் விடுதியை ஆய்வு செய்த எம்.எல்.ஏ., மாணவா்களுக்கு வழங்கிய அசைவ உணவை உண்டு, உணவின் தன்மை குறித்து சோதனை செய்தாா்.

அப்போது, அவரிடம் விடுதிக்கு கூடுதல் கட்டடம் வேண்டும் என விடுதி காப்பாளா் கோரிக்கை மனு அளித்தாா். இதேபோல, அப்பிபட்டி, எரசை என பல்வேறு இடங்களில் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.