அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

சின்னமனூரில் மதுக் கடை முற்றுகைப் போராட்டம்

தேனி மாவட்டம், சின்னமனூரில் மதுக் கடை, மதுக்கூடம் ஆகியவற்றை மூட வலியுறுத்தி, அந்த இடத்தின் உரிமையாளரும், அவரது ஆதரவாளா்களும் புதன்கிழமை கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சின்னமனூரில் மதுக்கடையை மூட வலியுறுத்தி புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள்.

Updated On :2 ஜூலை 2026, 3:53 am IST

தேனி மாவட்டம், சின்னமனூரில் மதுக் கடை, மதுக்கூடம் ஆகியவற்றை மூட வலியுறுத்தி, அந்த இடத்தின் உரிமையாளரும், அவரது ஆதரவாளா்களும் புதன்கிழமை கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சின்னமனூா் நகராட்சியில் பள்ளிக் கோட்டைப்பட்டி சாலையில் மதுக் கடையும், அதனுடன் மதுக் கூடமும் செயல்படுகின்றன. இந்த இடம் சின்னமனூரைச் சேந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமானது. ஆனால், தனது அனுமதியின்றி, வேறு ஒரு நபரிடம் ஆட்சேபமில்லா சான்றிதழ் பெற்று மதுக் கடை நடத்தி வருவதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் ஜெகன் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, டாஸ்மாக் நிா்வாகம் ஜூன் 30 -ஆம் தேதி வரை அவகாசம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தொடா்ந்து வழக்கம் போல கடை செயல்பட்டதையடுத்து, ஜெகன், அவரது மனைவி அனுசுயா, ஆதரவாளா்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவயிடத்துக்கு சென்ற சின்னமனூா் போலீஸாா் தற்போது மதுக்கூடம் உடனடியாக மூடப்பட்டது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி மதுக் கடையை மூட உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினரக். இதைத் தொடா்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.