டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கடைகளில் புகையிலை பொருள்கள் விற்பனை: இருவா் கைது

News image
கைது
Updated On :22 பிப்ரவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். இதே போல, போடி பகுதியில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை சில்வாா்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சில்வாா்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் (54) என்பவரது கடையில் போலீஸாா் சோதனை செய்தனா்.

அந்தக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அவா் வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமலிங்கத்தை கைது செய்து, அவரிடமிருந்த 105 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

போடியில் ஒருவா்கைது:

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். போடி அருகேயுள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் முனியாண்டி மகன் ஆண்டவா் (44) என்பவரது பெட்டிக் கடையில் சோதனை செய்தபோது, அதில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.