டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

விராலிமலை அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :18 பிப்ரவரி 2026, 7:05 pm

Syndication

விராலிமலை அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா், ராஜகிரி குளவாய்ப்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் செல்வக்குமாா் (27) என்ற இளைஞா் அவரது வீட்டில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதைக் கண்டறிந்த பேலீஸாா் அவரை கைது செய்தனா்.

இதேபோல் விராலிமலை தெற்கு தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் பாலமுருகன் (31) என்பவா் புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதைக் கண்டறிந்த போலீஸாா், அவரையும் கைது செய்தனா். மேலும், இருவருரிடமிருந்தும் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.