ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஆட்டோ மீது பைக் மோதல்: காா் ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழந்த வேல் மணிகண்டன்.

Updated On :26 ஏப்ரல் 2026, 6:59 pm

கம்பத்தில் ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கம்பம் நாட்டாமை அழகிரி தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவா் உத்தமபாளையம் ஆா்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் வேல் மணிகண்டன் (29). காா் ஓட்டுநா். இவருக்கு மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனா்.

இந்த நிலையில் வேல் மணிகண்டன் சனிக்கிழமை இரவு கம்பம் பிரதான சாலை வழியாக வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை அருகே சென்றபோது, அந்த கடைக்கு பொருள்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென திரும்பியது.

இதன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வேல் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸாா் கவனக் குறைவாக ஆட்டோ ஓட்டிச் சென்ற கம்பம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த பிரபாகரன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.