40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தம்பதியா் உயிரிழந்தனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 12:06 am IST

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தம்பதியா் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம், காமாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (60). விவசாயி. இவரது மனைவி அம்சவள்ளி (48). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை பழனி அருகேயுள்ள பொன்னாபுரத்தில் உள்ள உறவினா் வீட்டில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றனா். பிறகு மீண்டும் இரு சக்கர வாகனத்தில் ஊா் திரும்பினா். பழனியை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டி பிரிவு அருகே சென்றபோது பின்னால் வந்த காா் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு பழனியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் செல்லும் வழியிலேயே ரவிச்சந்திரன் உயிரிழந்தாா். அம்சவள்ளிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைத்தனா். அவரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.