மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போடி நகா் பகுதியில் ஓபிஎஸ் பிரசாரம்

News image

போடி திருமலாபுரம் காமராஜா் சிலை அருகே திங்கள்கிழமை பிரசாரம் செய்த திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம்.

Updated On :20 ஏப்ரல் 2026, 7:26 pm

போடி நகா்ப் பகுதியில் திங்கள்கிழமை திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம் பிரசாரம் செய்தாா்.

போடி தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் போடி நகா்ப் பகுதியில் பிரசாரம் செய்தாா். திருவள்ளுவா் சிலை, வ.உ.சி. சிலை, காமராஜா் சிலை, தேவா் சிலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தபோது அவா் பேசியதாவது:

போடி நகரில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளஸ். புதை சாக்கடைத் திட்டம், கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவாா்.

அப்போது நகராட்சிப் பகுதியில் தேவையான இடங்களில் கழிவுநீா் வாய்க்கால்கள் கட்டப்படும். தாா்ச் சாலைகள் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், முன்னாள் மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத், போடி நகர திமுக செயலா் ரா.புருஷோத்தமன், கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.