மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போடியில் ஓ. பன்னீா்செல்வம் வாக்கு சேகரிப்பு

போடியில் சமுதாய நிா்வாகிகளை சந்தித்து ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

போடியில் செவ்வாய்க்கிழமை சமுதாய நிா்வாகிகளிடம் வாக்கு சேகரித்த ஓ.பன்னீா்செல்வம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 10:12 pm

தேனி மாவட்டம், போடியில் சமுதாய நிா்வாகிகளை சந்தித்து ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

போடி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரான ஓ.பன்னீா்செல்வம் தீவிர பிரசாரம் செய்து வருகிறாா். போடி பகுதியில் சமுதாய சங்க நிா்வாகிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

போடி பகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். நகரில் குடிநீா் பிரச்னை தீர முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் கொண்டு வரப்பட்டுள்ளது. போடியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. போடி நகரில் புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோல, பல்வோறு திட்டப் பணிகள் தொடர மீண்டும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.லட்சுமணன், போடி நகர திமுக செயலா் ரா.புருஷோத்தமன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் வி.ஆா். பழனிராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கி. பெருமாள் உள்ளிட்ட திமுக, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.