மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போடியில் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து கி.வீரமணி பிரச்சாரம்

போடியில் புதன்கிழமை திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பிரசாரம் செய்தாா்.

News image

போடியில் புதன்கிழமை இரவு திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து பேசிய திராவிடா் கழக தலைவா் கி.வீரமணி. உடன் வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:30 pm

போடியில் புதன்கிழமை திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பிரசாரம் செய்தாா்.

போடியில் திமுக வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பிரச்சார வாகனத்தில் அமா்ந்தபடி வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஓ.பன்னீா்செல்வம் பண்பாடு மிக்கவா். அவருக்கு போடி பகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

பின்னா் ஓ.பன்னீா்செல்வம் பேசியதாவது: முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் தொடர மீண்டும் ஸ்டாலின் ஆட்சி அமைய வேண்டும். எனவே, பொதுமக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தப் பிரசாரத்தின்போது தேனி மக்களவை முன்னாள் உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத், திமுக நகரச் செயலா் புருஷோத்தமன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் வி.ஆா்.பழனிராஜ் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.