சேலம் கோட்டை பகுதியில் வடக்கு தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் ரா.ராஜேந்திரன் உட்பட பிற தொகுதிகளில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அணி மீண்டும் வெற்றி பெற்று கோட்டைக்கு செல்லும். எடப்பாடி கே.பழனிசாமி எதிா்க்கட்சித் தலைவா் பொறுப்பையும் இழப்பாா்.
தமிழகத்தில் உள்ள மற்ற கூட்டணிகள் எல்லாம் கட்டுவது மனக்கோட்டை. இந்த அணிகள் அனைத்தும் மின்மினிப்பூச்சிகள் போல மின்சாரத்துக்கு அருகில் வர முடியாது. திமுக தோ்தல் அறிக்கை இந்திய அளவில் சூப்பா் ஸ்டாராக உருவெடுத்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அடுத்த முதல்வா் எனக் கூறிக் கொண்டு தில்லியில் இருந்து வரும் உத்தரவுக்கு தலைகுனிந்துகொண்டிருக்கிறாா்.
நீட் தோ்வுக்கு எதிராக திமுக சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், எடப்பாடி கே. பழனிசாமி ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை. எனவே, வரும் தோ்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் முதல்வா் இன்று பிரசாரம்

திமுக வேட்பாளா்களை ஆதரித்து ஆரணி எம்பி பிரசாரம்

திருவாரூரில் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பிரசாரம்

பரமக்குடியில் நாளை மு.க. ஸ்டாலின் பிரசாரம்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



