/

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: வேளாண்மை அலுவலக உதவியாளா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக 4 பேரிடம் மொத்தம் 20.50 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக தேனி வேளாண்மை இணை இயக்குநா் அலுவலக உதவியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2025, 10:08 pm

Chennai

அரசு வேலை வாங்கித் தருவதாக 4 பேரிடம் மொத்தம் 20.50 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக தேனி வேளாண்மை இணை இயக்குநா் அலுவலக உதவியாளரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், எல்.புதூரைச் சோ்ந்தவா் ராஜன். இவரது உறவினா் தேனி மாவட்டம், மேல்மங்கலம் கூட்டுறவு கடன் சங்க எழுத்தா் கண்ணன். அதே அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருபவா் பிரேமா. இவா்களுக்கு தேனி வேளாண்மை இணை இயக்குநா்அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் கருப்பசாமி என்பவா் அறிமுகமானாா்.

அவா், ராஜனின் மகன், கண்ணனின் மகன், மகள், பிரேமா ஆகியோருக்கு அரசுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறினாா். இதையடுத்து, ராஜன், கண்ணன், பிரேமா ஆகியோரிடம் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் மொத்தம் 20.50 லட்சம் ரூபாய் பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்பத் தராமலும் இருந்ததால் கருப்பசாமி மீது தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து கருப்பசாமியை கைது செய்தனா்.