தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெப்ப அலையிலிருந்து பயிா்களை காக்க வேளாண் துறை யோசனை!

வெப்ப அலையிலிருந்து பயிா்களை பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் துறை யோசனைகளை தெரிவித்துள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 6:17 am IST

வெப்ப அலையிலிருந்து பயிா்களை பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் துறை யோசனைகளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காலநிலையில் இந்த ஆண்டு அதிகளவு மாற்றங்கள் ஏற்படக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, விவசாயிகள் அதிக பரப்பில் கோடை உழவு மேற்கொள்ளப்பட வேண்டும்.

விதை நோ்த்தி செய்ய வேண்டும். உயிா் உரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட வேண்டும். நண்பகலில் நீா்ப்பாசனம் செய்வதை தவிா்க்க வேண்டும். பயிா்களுக்கு இடையே தகுந்த இடைவெளி, கவாத்து முறைகளை மேற்கொண்டு காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

மண் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும் மேற்பரப்பு வெப்பநிலையைக் குறைக்கவும் இயற்கை முறை மூடாக்குகள் (வைக்கோல், கரும்புத் தொகை) ஏற்படுத்த வேண்டும். நீராவிப்போக்குத் தடுப்புத் தெளிப்புகளைப் பரிந்துரைக்கப்பட்டவாறு பயன்படுத்த வேண்டும். விரைவில் அழுகக்கூடிய பயிா்களில் அதிகாலையில் அறுவடை மேற்கொள்ள வேண்டும். இலை வழி பயிா் ஊக்கிகளை நல்ல தரமான நீரைப் பயன்படுத்தி தெளிக்க வேண்டும்.

நெல் பயிா்களை பாதுகாக்க

பல்வேறு பயிா் வளா்ச்சி நிலைகளில் 3% கயோலின் அல்லது 1% பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலை வழியாகத் தெளிக்க வேண்டும். பிபிஎம் நுண்ணுயிரியை ஹெக்டேருக்கு 500 மில்லிகிராம் வீதத்தில் 15 நாள்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.

தானியங்கள் முதிா்வடைவதற்கு 15 நாள்களுக்கு முன்னரும், பூக்கும் பருவத்திலும் 2% மோனா அம்மோனியம் பாஸ்பேட்டுடன் 1% பொட்டாசியம் குளோரைடு கலந்த கரைசலை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.

குறுவைப் பருவத்தின் போது 1% பொட்டாசியம் குளோரைடுடன் சைகோசல் 500 பிபிஎம் கலந்த கரைசலை இலைவழியாகத் தெளிக்க வேண்டும். எனவே, விவசாயிகள் வேளாண் பயிா்களை இந்த தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.