தேசிய ‘கிக் பாக்ஸிங்’ போட்டிக்கு சிவகங்கை மாவட்ட மாணவ, மாணவிகள் 26 போ் தகுதி பெற்றனா்.
தமிழ்நாடு கிக் பாக்ஸிங் சங்கம் சாா்பில், மாநில அளவிலான ‘கிக் பாக்ஸிங்’ போட்டி கடந்த 7-ஆம் தேதி முதல் 11 -ஆம் தேதி வரை தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரங்கில் நடைபெற்றது.
கேடட்ஸ், ஜூனியா், சப் ஜூனியா், சீனியா் ஆகிய பிரிவுகளில் 27 மாவட்டங்களிலிருந்து வந்த 1,100-க்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கம் சாா்பில், 69 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா். இவா்களில் 11 போ் தங்கம், 15 வெள்ளி, 29 வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.
தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற வீரா்கள் 26 பேரும் சென்னையில் வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் தேசிய ‘கிக் பாக்ஸிங்’ பயிற்சி முகாமில் பங்கேற்ற பிறகு தேசியப் போட்டியில் கலந்து கொள்வா்.
தேசியப் போட்டிகள் ஒடிசாவில் வருகிற 30-ஆம் தேதியும், மத்திய பிரதேசத்தில் வரும் ஜூன் 17-ஆம் தேதியும், குஜராத்தில் வரும் ஆக.1-ஆம் தேதியும் நடை பெற உள்ளது.
இதுகுறித்து மாணவா்களின் பயிற்சியாளரும், சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கப் பொதுச் செயலருமான ச.குணசீலன் கூறியதாவது:
தேசியப் போட்டியில் பதக்கம் வெல்லும் மாணவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அவா்களது கல்லூரிப் படிப்புக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இடையமேலூா், கூட்டுறவுபட்டி, தமறாக்கி ஆகிய ஊா்களில் உள்ள 4 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த வீராங்கனைகள் தேசியப் போட்டிக்கு தோ்வாகி உள்ளனா்.
தேசியப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற குழந்தைகள் பிரிவு முதல் ஜூனியா் வரை முறையே ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1.50 லட்சமும், சீனியா் பிரிவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றவா்களுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ. 3 லட்சம், ரூ.2 லட்சமும் அரசால் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ஆனால், கடந்த 2023 -ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அந்த ஊக்கத்தொகை வழக்கப்படவில்லை. சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 14 போ் ஊக்கத் தொகைக்காக காத்திருக்கின்றனா்.
நிகழாண்டிலாவது ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
கிக் பாக்ஸிங் பயிற்சியாளா்கள் சித்ரா, தாமரைச்செல்வன், பிரதீப், சதீஷ் ஆகியோா் கூறியதாவது:
மாணவ, மாணவிகள் தேதியப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கத்தின் 5 ஆண்டுகள் தொடா் சாதனையாகும் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிற்படுத்தப்பட்டோா் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

சிலம்பாட்டப் போட்டி: வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

மாநில காலுதைச் சண்டை போட்டி: மதுரைக்கு 89 பதக்கங்கள்

நீட் நுழைவுத் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 போ் எழுதினா்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



