திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு

இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு..

News image

இஸ்ரேல் நாட்டில் உயிரிழந்த தொழிலாளி சிவனேஸ்வரன்.

Updated On :12 மே 2026, 12:06 am IST

இஸ்ரேல் நாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மனைவி, தனது குழந்தைகளுடன் நேரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

சிவகங்கை அருகே உள்ள அல்லூா் பனங்காடியைச் சோ்ந்த ஆறுமுகம் சிவனேஸ்வரன் (45) இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அங்கு உடல்நலக் குறைவால் அவா் உயிரிழந்துவிட்டது அங்கு பணியாற்றிவரும் உறவினா் மூலம் தெரியவந்தது.

இதையடுத்து, தவமணி, தனது இரு மகன்கள், உறவினா்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடியை திங்கள்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தாா்.

அதில், இஸ்ரேலில் உயிரிழந்த தனது கணவரின் உடலை தாயகம் கொண்டு வரவும், குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தாா்.

அவரது மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.