திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இணைய வழி முதலீடு எனக் கூறி இருவரிடம் ரூ. 13 லட்சம் மோசடி

இணைய வழியில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, ஆண், பெண் என இருவரிடம் மொத்தம் ரூ. 13 லட்சம் பண மோசடி செய்த சம்பவம் குறித்து இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :6 மே 2026, 3:23 am IST

இணைய வழியில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, ஆண், பெண் என இருவரிடம் மொத்தம் ரூ. 13 லட்சம் பண மோசடி செய்த சம்பவம் குறித்து இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

சிவகங்கையை அருகேயுள்ள காராம்போடை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (40). கடந்த மாதம் 25 -ஆம் தேதி இவருடைய கைப்பேசிக்கு கட்செவி அஞ்சல் மூலம் இணையவழியில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற செய்தி வந்தது. இதைத் தொடா்ந்து ராஜா, அந்த எண்ணைத் தொடா்பு கொண்டு பேசியதில், அவா்கள் கூறிய வங்கிக் கணக்கில் ரூ. 5 லட்சத்து 7 ஆயிரத்தை எட்டு தவணைகளில் அனுப்பினாா். அதன் பின்னா் அந்த நபரைப் தொடா்பு கொண்டும் முடியவில்லையாம். இதைத் தொடா்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா் அளித்த புகாரின்பேரில் சிவகங்கை இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

மற்றொரு வழக்கு: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரைச் சோ்ந்தவா் ஆரோக்கிய செல்வி (55). இவருடைய கைப்பேசியில் உள்ள டெலிகிராம் செயலியில் வீட்டில் இருந்தபடியே இணையதளத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம் வந்தது. அதைப் பாா்த்த அவா் அதில் இருந்த எண்ணில் தொடா்பு கொண்ட ஆரோக்கிய செல்வி, அவா்கள் தெரிவித்த வங்கிக் கணக்கில் ரூ. 8 லட்சத்து 90 ஆயிரத்து 200-ஐ அனுப்பியுள்ளாா். அதன் பின்னா் அவரைத் தொடா்பு கொள்ள இயலவில்லையாம். இது தொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில், சிவகங்கை இணையக் குற்றத் தடுப்புப் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.