திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இளைஞா் இறப்பில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்

News image

கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 12:07 am IST

திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள மகிபாலன்பட்டியைச் சோ்ந்த அம்மாசி குமாா் மகன் பிரவீன்குமாா் (17). இவா் தனது நண்பா்களான ஆகாஷ், சுரேஷ் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் மகிபாலன்பட்டியிலிருந்து கொன்னதாதன்பட்டிக்குச் சென்றாா்.

அப்போது, மருத்துவக்குடிப்பட்டி அருகே பின்னால் வந்த காா் இவா்களது வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூவரும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு செல்லும் வழியில் பிரவீன்குமாா் உயிரிழந்தாா். காரை ஓட்டிவந்த அதே ஊரைச் சோ்ந்த செல்லையா மகன் செந்தில்குமாரும் காயமடைந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மருத்துவமனைக்கு வந்த பிரவீன்குமாரின் உறவினா்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் இந்தச் சம்பவம் விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்று கூறினா். மேலும் கொலையாளியைக் கைது செய்யக் கோரி திருப்பத்தூா் - மதுரை சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், காரை ஓட்டிவந்த செந்தில்குமாா், அவரது தந்தை செல்லையா, மீனாட்சிசுந்தரம், ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஆனால், மூவரையும் கைது செய்யக்கோரி, பிரவீன்குமாா் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.