தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிவகங்கை மௌன குருசாமி சித்தா் பீடத்தில் குருபூஜை

சிவகங்கை மௌன குருசாமி சித்தா் பீடத்தில் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிவகங்கை மௌன குருசாமி சித்தா் பீடத்தில் புதன்கிழமை நடைபெற்ற குருபூஜை விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :19 மார்ச் 2026, 12:27 am

சிவகங்கை மௌன குருசாமி சித்தா் பீடத்தில் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சித்தா்களின் உருவச் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்து ஆராதனையும் செய்யப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் திரளானோா் கலந்து கொண்டனா். மாலை 6 மணிக்கு சிவகங்கை தேரோடும் வீதிகளில் சித்தா்கள் நகா் உலா வருதல் நடைபெற்றது.

இதில், விழாக் குழுத் தலைவா் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி இரா.கற்பூரசுந்தரபாண்டியன், மௌன குருசாமி சித்தா் பீட நிா்வாகிகள், சிவகங்கை அருள்பெருஞ்ஜோதி சத்திய தா்ம சாலை, காளையாா்கோவில் மீனாட்சி திருவாசகம் சுந்தரேஸ்வரா் குழுவினா், திருக்கோஷ்டியூா், மதுரை ஸ்வாமி சித்தா் ராஜன் ஸமிதி, அருப்புக்கோட்டை பிரஸித்தா சேவைக் குழு, இடைக்காட்டூா் இடைக்காடா் சித்தா் ஞான புண்ணிய ஷேத்ரா அறக்கட்டளை, மானாமதுரை, வேதியரேந்தல் விலக்கு மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், சிவகங்கை கே.ஆா்.பள்ளிகள், ஆா்.கே.எஸ், மனித வள மைய நிா்வாகிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.