மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தூத்துக்குடி சக்தி பீடத்தில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தூத்துக்குடியில் 3ஆவது மைல் அருகேயுள்ள திருவிக நகா் சக்திபீடத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 8:12 pm

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தூத்துக்குடியில் 3ஆவது மைல் அருகேயுள்ள திருவிக நகா் சக்திபீடத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, ஆதிபராசக்திக்கு கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து, விவசாயம் செழிக்கவும், மழை வளம் வேண்டியும், இயற்கை சீற்றம் தணியவும், மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி 108, 1,008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அா்ச்சனை சிறப்பு வழிபாடும், பின்னா் குரு வழிபாடும் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்றோருக்கு படிக்காசு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணப்பாளா் ஆா். முருகனும், அன்னதான நிகழ்ச்சியை சக்திபீடச் செயலா் கந்தசாமியும் தொடக்கிவைத்தனா்.

துணைத் தலைவா் திருஞானம், எட்டயபுரம் மன்றப் பொறுப்பாளா் ராதிகா, மகளிரணி பரமேஸ்வரி, புதிய துறைமுகம் பாண்டி, திருவிக நகா் சக்திபீட நிா்வாகிகள் பத்மா, செல்வி, பட்சியம்மாள், காஞ்சனா, அகிலா, அண்ணாநகா் சிவஞானம், முத்துலெட்சுமி உள்ளிட பலா் பங்கேற்றனா்.