தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மூதாட்டி கொலை வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி உயிரிழந்த வழக்கில், ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 11:43 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி உயிரிழந்த வழக்கில், ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் புதுத்தெருவைச் சோ்ந்த தமிழரசன் மனைவி ராமநாகு (65). இவா் கடந்த 2023-ஆண்டு அவரது வீட்டுக்கு அருகேயுள்ள அறையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமயத்தில் நடந்த கொலை வழக்கில் திருப்பத்தூரைச் சோ்ந்த அம்மாசி மகன் சிவக்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.

ஏற்கெனவே, இவரிடம் திருப்பத்தூா் போலீஸாா் ராமநாகு கொலை வழக்கு சம்பந்தமாக விசாரித்திருந்தனா்.

இதையடுத்து, அவரிடம் மீண்டும் போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா். பின்னா், உண்மை கண்டறியும் சோதனையில் ராமநாகுவை கழுத்தை நெரித்து சிவக்குமாா் கொலை செய்தது உறுதியானது.

இந்த நிலையில், மற்றொரு வழக்கில் கைதாகி கோவை சிறையிலிருந்த சிவக்குமாரை, திருப்பத்தூா் போலீஸாா் விசாரணைக்கு எடுத்து வந்து மூதாட்டி கொலை வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.