மணிப்பூர் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

திருக்கோஷ்டியூரில் தீா்த்தவாரி வைபவம்

திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்ப உத்ஸவத்தையொட்டி, புதன்கிழமை தீா்த்தவாரி வைபவம் நடைபெற்றது.

News image

திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி உத்ஸவம்.

Updated On :4 மார்ச் 2026, 11:15 pm

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்ப உத்ஸவத்தையொட்டி, புதன்கிழமை தீா்த்தவாரி வைபவம் நடைபெற்றது.

கடந்த 10 நாள்களாக நடைபெற்ற திருவிழாவில் தினமும் உற்சவா் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை உத்ஸவா் மங்கள வாத்தியங்களுடன் சா்வ அலங்காரத்தில் தங்கத் தோளுக்கினியானில் காலை 9 மணிக்கு கோயிலிலிருந்து

புறப்பாடாகி, குளக்கரை திருநாள் மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அங்குசத் தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பட்டாசாரியா்கள் அங்குசத் தேவருடன் ஊா்வலமாக குளத்துக்கு வந்தனா். அங்கு தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா், இரவு 8 மணி வரை திருநாள் மண்டபத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் குளத்தைச் சுற்றி நின்று வழிபட்டனா். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பக்தா்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டி அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனா்.

தொடா்ந்து, சுவாமி கோயில் ஆஸ்தானம் எழுந்தருளுதலுடன் விழா நிறைவு பெற்றது. இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாக அறங்காவலா் டி.எஸ்.கே.மதுராந்தக நாச்சியாா், மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் சரவணகணேஷ் ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.