/

திருக்கோஷ்டியூா் பெருமாள் கோயிலில் ஏப். 30-இல் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவத்தையொட்டி வியாழக்கிழமை தங்க அனுமன் வாகனத்தில் சுவாமி வீதி புறப்பாடு நடைபெற்றது.

News image

திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோத்ஸ விழாவில் 3-ஆம் நாள் வியாழக்கிழமை தங்க அனுமன் வாகனத்தில் எழுந்தருளிய உத்ஸவர்.

Updated On :23 ஏப்ரல் 2026, 8:47 pm

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவத்தையொட்டி வியாழக்கிழமை தங்க அனுமன் வாகனத்தில் சுவாமி வீதி புறப்பாடு நடைபெற்றது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோத்ஸவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ஆம் நாளான வியாழக்கிழமை காலை 8 மணிக்கு சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, மாலையில் தங்க அனுமன் வாகனத்தில் சா்வ அலங்காரத்துடன் உத்ஸவ பெருமாள் வீதி உலா வந்தாா். தொடா்ந்து 9-ஆம் திருநாளான புதன்கிழமை தலைஅலங்காரம் கண்டருளல் நிகழ்வும், ஏப்.30-இல் 10 ஆம் திருநாளையொட்டி தேரோட்டமும் நடைபெற உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.