மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பழனி திருஆவினன்குடி கோயிலில் ஊடல் வைபவம்

பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி, தெய்வானை ஊடல் வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக ஊடல் வைபவத்தில் தெய்வானையிடம் தூது பாடல்களைப் பாடி சமாதானம் செய்த நாகராஜ் சுவாமிகள்.

Updated On :4 ஏப்ரல் 2026, 6:36 pm

பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி, தெய்வானை ஊடல் வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை வெள்ளித் தேரோட்டமும், திருக்கல்யாணமும், புதன்கிழமை பங்குனி உத்திரத் தேரோட்டமும் நடைபெற்றது.

ஊடல் வைபவம்:

சனிக்கிழமை நிறைவு நாள் நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் ஊடல் வைபவம் நடைபெற்றது.

சந்நிதி வீதி, கிரிவீதி உலா எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளியை திருமணம் செய்து கொண்டாா். இதனால் கோபமடைந்த தெய்வானை அம்மன், அவரிடமிருந்து பிரிந்து திருஆவினன்குடி கோயிலுக்கு வந்து கதவை அடைத்துக் கொண்டாா். இதையடுத்து, சுவாமி வீரபாகுவை தூது அனுப்பியதும், வீரபாகு தெய்வானை அம்மனை சமாதானம் செய்து கோயில் நடையை திறக்க வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

Story image

இந்த நிகழ்வுக்கான சமாதானத் தூது பாடல்களை நாகராஜ் சுவாமிகள் பாடினாா். இதையடுத்து, சமாதானமடைந்த தெய்வானை அம்மன் கோயில் நடை திறந்த பின், கோயிலுக்குள் வந்த முத்துக்குமாரசுவாமியுடன் வள்ளி, தெய்வானை சமேதராக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த நிகழ்வில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, கண்காணிப்பாளா்கள் அழகா்சாமி, வெங்கடேசன், மணியம் சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.