காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழாவின் நிறைவையொட்டி வெள்ளிக்கிழமை தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
சின்னக்காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய கோமளவல்லித்தாயாா் சமேத யதோத்தக்காரி பெருமாள் கோயில். இக்கோயில் வருடாந்திர பங்குனி மாத பிரம்மோற்சவம் நிகழ் மாதம் 12-ஆம் தேதி யாழக்கி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான கருடசேவை மாா்ச் 14-ஆம் தேதி சனிக்கிழமையும், தேரோட்டம் மாா்ச் 18- ஆம் தேதியும் நடைபெற்றது.விழாவையொட்டி தினசரி பெருமாள் காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதன் தொடா்ச்சியாக தீா்த்தவாரி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தீா்த்தவாரியின் போது கோயில் பட்டாச்சாரியாா்கள், பக்தா்கள் பலரும் திருக்குளத்தில் இறங்கி புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 20) இரவு புஷ்ப பல்லக்கு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் நல்லப்பா நாராயணன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

வடக்குப்பட்டு சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருத்தேர் உற்சவம் கோலாகலம்!

யதோத்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


