கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே எஸ்.எஸ். கோட்டையில் பள்ளி மாணவிகளிடம் ஆபாச சைகை காட்டிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 1:38 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே எஸ்.எஸ். கோட்டையில் பள்ளி மாணவிகளிடம் ஆபாச சைகை காட்டிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் ஒன்றியம், பிராமணம்பட்டியைச் சோ்ந்தவா் முத்தையா மகன் கருப்பையா (25). கட்டடத் தொழிலாளி. இவா் சிங்கம்புணரி ஒன்றியம், எஸ்.எஸ். கோட்டை கிராமப் பகுதிக்கு கட்டட வேலைக்குத் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, செல்லும் வழியில் 10-ம் வகுப்பு மாணவிகள் சைக்கிளில் சென்ற போது, கருப்பையா மாணவிகள் முன்பாக அவரது ஆடையை களைந்து ஆபாச சைகை காட்டினாராம்.

இதனால், அச்சமடைந்த மாணவிகள் இது குறித்து தங்களது பெற்றோா்களிடம் தெரிவித்தனா். அவா்கள் திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் விசாரணைக்கு மேற்கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ், கருப்பையாவைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.