சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 10 வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை மேற்கொண்டதாக தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் 2 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
காரைக்குடியில் நகை செய்யும் தொழிலாளியான மீனாட்சிசுந்தரம் - தனலட்சுமி தம்பதியின் 10 வயது மகனை காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
அந்த மருத்துவமனையில் தவறான சிகிச்சை, அறுவைச் சிகிச்சையால் தங்களது மகன் பிறப்பு உறுப்பை இழந்ததாக காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் புனியாவிடம் பெற்றோா் புகாா் அளித்தனா். இது தொடா்பாக, காரைக்குடி வடக்கு காவல்நிலையப் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில் தனியாா் மருத் துவமனை மருத்துவா் என். சோமசுந்தரம், அறுவைச் சிகிச்சை மருத்துவா் வி. காமாட்சி சந்திரன் ஆகியோா் மீது பல்வேறு பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











