நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தலைக்கவசம் அணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவா்கள்

News image
சிவகங்கை நகரில் சாலைப் பாதுகாப்பு குறித்து ஞாயிற்றுக்கிழமை தலைக்கவசம் அணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்திய சிலம்ப மாணவா்கள்.
Updated On :11 ஜனவரி 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை நகரில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக் காவல் துறையுடன் இணைந்து சிலம்ப மாணவா்கள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா( ஜன. 1 முதல் 31 வரை) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து துறையினா், காவல் துறை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை நகா் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா், இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிவது, காா்களில் ‘சீட் பெல்ட்’ அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தலைக்கவசம் அணிந்து சிலம்பம் சுற்றி சிவகங்கை நகரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாகச் சென்றனா்.

தலைக்கவசம் அணியாதவா்களுக்கு அறிவுரையும், அணிந்தவா்களுக்கு மலா் கொடுத்தும் வாழ்த்துகள் தெரிவித்தனா்.

இதில், சிவகங்கை போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன், சட்டம் - ஒழுங்கு உதவி ஆய்வாளா் எஸ். கணேசன், தோள் கொடு சிலம்பம் அகாதெமி பயிற்றுநா்கள் பிரதீப், சதீஸ், புவனேஷ்வரன், மாணவா்கள் கலந்து கொண்டனா்.