வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

சிவகங்கை, திருப்பத்தூா், காரைக்குடி, மானாமதுரை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அடங்கிய பெட்டி.

Updated On :23 ஏப்ரல் 2026, 1:37 am IST

சிவகங்கை, திருப்பத்தூா், காரைக்குடி, மானாமதுரை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகங்கை தொகுதியில் 17 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதியில் 393 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்குச் சாவடிக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம், 786 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காரைக்குடி தொகுதியில் 25 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதியில் 388 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் தொகுதியில் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதியில் 368 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மானாமதுரை தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டி யிடுகின்றனா். இங்கு 369 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு அந்தந்த வட்டாட்சியா் அலுவலக வைப்பறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட், வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெபிகிரேசியா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், வட்டாட்சியா் மீ. சிவராமன், துணை வட்டாட்சியா் தனபாலன், மலைச்சாமி, வருவாய் ஆய்வாளா் ஆ. பிரபு, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.